கருவிலே குழந்தை என்றாய்...
பிறந்தேன் பாலினம் கண்டாய்...
வளர்ந்தேன் மதஇனம் பிரித்தாய்...
பள்ளியிலே சாதிச் சான்றிதழ்!!
பாடப் புத்தகத்திலே ???
சாதிகள் இல்லையடி பாப்பா !!!
மனப்பாடத்தில் மட்டும் பாட்டுண்டு....
மனப்பக்குவத்தில் ஏனில்லையோ ????
கீழவீதியில் அவன் நுரையீரல் தீண்டிய காற்று எனை
தீண்டியதில் நான் தீண்டத்தகாதவன் ஆவேனோ ??
மழைமேகம் பொழியும் நீர் இவன் வாசல்
தாண்டியதில் அது புண்ணிய நதியென மாறிடுமோ ??
பருகும் நீருக்கு வண்ணம் இல்லை
சுவாசிக்கும் காற்றுக்கும் பகுப்பு இல்லை
கருவின் உயிருக்கு மட்டும் வர்ணம் ஏனோ ??
நேசிக்கும் இதயங்களை பிரித்து வைத்திட தானோ !!
மனம் மாற நினைத்தாலும் மதி கெட்டு போயின்
குணம் மாறிடாது மத வெறி தலைக்கு ஏறிடின்
சினம் கொண்டு எழுந்திடு சாதி யாதென கேட்பின்
கணம் இதுவே எதிர்த்திட மாற்றி எதையும் வகுத்திட ...!