Friday, 18 March 2016

நட்புக்கு தெரிவதில்லை ....!!!


Image result for different roses images


சொந்தங்கள் அனைத்தும் போகும் தொலைவிலே
       தோள்சாயும்  நட்பின் அன்பிலே...
சாதிக்கும் போதெல்லாம் தட்டிக்கொடுக்கையிலே
       வாதிடும்  போதோ வார்த்தையிலே...
தடுமாறும் நேரம் வாழ்க்கைத்  தடமாறமாலே
         வழிமாற்றும்  மனம் தேற்றும் ....
                              நட்புக்கு....
தெரிவதில்லை ஏனோ  என்று  பூப்பதென்று ....

கால்சட்டை அணியத்  துவங்கிய பருவத்திலே
      மழைக்கு முளைக்கும் காளானாய்...
 கண்கள் கலங்கும் துளி ஈரத்திலே
       விரல்கள் மாறும் கைக்குட்டையாய் ...
சரித்திரம் அதிலே புதியதொரு அத்தியாயமாய்
     வரைந்திட்டால்  என்றும் புன்னகைக்கும்  ஓவியமாய்
                           மாறும்  நட்புக்கு....
தெரிவதில்லை ஏனோ எப்படி பூப்பதென்று ....

வாழ்க்கையில்அவ்வப்போது மலர்ந்திடும்
         சின்ன சண்டைகள் சித்திரப் புன்னகைகள்
வண்ண கனவுகள்  வட்டமிடும் நினைவுகள்
         செல்ல கோபங்கள் நல விசாரிப்புகள் என
                      வாழும் நட்புக்கு...
தெரிவதில்லை ஏனோ எவ்வாறு  பூப்பதென்று  ....

நில்லாமல் ஓடும் நாட்களாய்
        தினமும் நீளும் தொடர்கதை இதுவோ ....??


   





விடை சொல் நட்பே ....!!





நட்பே ....!!!

காற்றாய்  நீ ....!!என் வாழ்வில்  வீசிப் போனாய்
உன்னைப் பிரிந்தால் சுவாசம் வாசமின்றிப் போகும் ...

பூக்களாய்  நீ ....!!என் வாழ்வில் பூத்து விட்டாய்
நீ வாடினால் என் மனமும் உதிர்ந்துவிடும்....

நிலவாய் நீ....!! வந்து போனதால் என் வாழ்வில்
சிலநேரம் என் வானம் இருட்டி விடுகிறது.....

மழையாய் நீ...!! என்னை பிரிந்து பூமிக்கு வந்ததால்
மேகமாய் இருந்த நான் மறைந்து போனேன் ...

வெயிலாய் நீ...!!என்னை சுட்டெரித்தாலும்
வேதனையை குறைத்து சென்றாய்....

பகலாய் நீ....! ஒளிர்ந்து நின்றாய்
இரவாய் நீ....! நின்று ஒளிர்ந்தாய்
வானவில்லாய்  நீ ....!! வளைந்து வந்தாய்

மாறாத வானிலையாய் என்று என்
வாழ்வில் நீ வாழ்ந்து போவாய் .....????

விடை சொல் நட்பே ....
விடைப் பெறுகிறேன் என்று மட்டும் சொல்லாதே ....!!!!
                             

உறவுக்கு உயிர் கொடுத்திடு ....!!





காலை நேரம்  தோன்றும் வானம் நீ !!!
புது விடியல் தேடும் பூமி நான் !!!

இருவிழி நோக்கையிலே புதிதாய் ஒரு ஒளி ...
இமைகள் மூடிடவே  மெலிதாய் சிறு வலி....

கண்டேன் பெண்ணே ......உன்னை
சேர்த்தேன் எந்தன் இதயத்திலே
காற்றாய் நீயும் ...
கலந்தாய் என் மூச்சினிலே !!

ஆசையில்  ஓர் அஞ்சல் வரைந்தேன்
மேசையில்.... அது உன் பார்வையில்
சேர்த்திட வைத்தேன்
கண்டாய் நீயும் !!!
கொண்டேன் நானும் உனை நெஞ்சிலே..

தேய்ந்து வளரும் நிலவாய் நாளும்
உனை பார்த்து வாழ்ந்தேன் நானும்
நீ ஏங்கிட ....
நான் தூங்கிட....
ஒரு வழி சொல் கண்ணே ...

விட்டுச் செல்லும் எண்ணமில்லை
நீயின்றி வண்ணமில்லை
வாழ்விலே......என் வாழ்விலே
வானவில்லும் நீயே...
எனை வெல்லும் விழியும் உனதே ...

சேர்ந்திடு....
எனை உன்னில் சேர்த்திடு
உயிர் கொடுத்திடு ....
நம் உறவுக்கு ....






மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...