காலம் உருண்டோட
ஞாலமோ மருண்டோடுது ...
கதிர்வீச்சில் மட்டுமே ஒளிந்திருந்த நேரம்
கண் சிமிட்டுது காலக்கெடுவையாய் ...
சேவலின் கூவலில் விடிந்த காலை
அலைப்பேசியின் எச்சரிக்கை ஒலியாய்..
மலர்ந்த பூக்களில் கமழ்ந்த சுகந்தம்
அடைக்கப்பட்ட வாசனைத் திரவியமாய் ...
பனை ஓலை வேய்ந்த இல்லம்
கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடமாய் ...
அணை கட்டி பெருகிய ஆறு
கொள்ளை போகும் மணலாய் ...
முப்போகம் விளைந்த விவசாய பூமி
இப்போது காய்ந்த முற்காடாய் ...
அம்மியில் அரைத்த பாட்டி சமையல்
அடுக்களையின் நவீன இயந்திரமாய் ...
பிறந்து வளர்ந்த சொந்த ஊரிற்கு
என்றாவது வரும் விருந்தாளியாய் ....!!!
கடவுள் படைத்ததாய்
பிரகடனப்படுத்தப்பட்ட பிரபஞ்சம்
ஆளப்பட்டது மனிதனால் ....!
மனிதன் உருவாக்கிய
வர்த்தகம் இணையம்
ஆள்கிறது உலகை ....!!
ஞாலமோ மருண்டோடுது ...
கதிர்வீச்சில் மட்டுமே ஒளிந்திருந்த நேரம்
கண் சிமிட்டுது காலக்கெடுவையாய் ...
சேவலின் கூவலில் விடிந்த காலை
அலைப்பேசியின் எச்சரிக்கை ஒலியாய்..
மலர்ந்த பூக்களில் கமழ்ந்த சுகந்தம்
அடைக்கப்பட்ட வாசனைத் திரவியமாய் ...
பனை ஓலை வேய்ந்த இல்லம்
கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடமாய் ...
அணை கட்டி பெருகிய ஆறு
கொள்ளை போகும் மணலாய் ...
முப்போகம் விளைந்த விவசாய பூமி
இப்போது காய்ந்த முற்காடாய் ...
அம்மியில் அரைத்த பாட்டி சமையல்
அடுக்களையின் நவீன இயந்திரமாய் ...
பிறந்து வளர்ந்த சொந்த ஊரிற்கு
என்றாவது வரும் விருந்தாளியாய் ....!!!
கடவுள் படைத்ததாய்
பிரகடனப்படுத்தப்பட்ட பிரபஞ்சம்
ஆளப்பட்டது மனிதனால் ....!
மனிதன் உருவாக்கிய
வர்த்தகம் இணையம்
ஆள்கிறது உலகை ....!!



