சித்திரமும் பேசும் அவள் அழகிலே
சத்திரியனும் வீழ்வான் விழி நோக்கையிலே
காரிருள் கருமை நீக்க கண்ணுக்கு மை இட்டவள்
சூரியக் கதிர் எடுத்து சுடர் ஏற்றியவள்
வாரியே அன்பை வழங்கும் வள்ளலவள்
வானவில்லை வளைத்து கைவளையல் செய்தவள்
பொங்கிவரும் அலையினை கண்ணுக்குள் அடைத்தவள்
தங்கிவிடும் சோகம் போக்க தனியே அழுதவள்
பௌர்ணமியாய் ஒளி வீசும் பூவவள்
புன்னகையில் புது வாசம் பேசியவள்
ஆதரிப்பாய் என உன்வழி நடந்தவள்
சேதாரமென நீ தூக்கி எறிந்தவள்
தங்கம் வேண்டுமென தாக்கி வதைத்தாய்
அங்கம் சிதைத்தாலும் மரித்து போகவில்லை
வானம் சேரவோ மனது கொள்ளவில்லை
மானம் பெரிதென தனதாய் நின்றாள்
மாறும் உலகிற்கு துணையாய் வந்தாள்
பாரும் ஒருநாள் தனதாக்கி வெல்வாள் .....