Tuesday, 8 March 2016

பெண்மை




சித்திரமும் பேசும் அவள் அழகிலே 
      சத்திரியனும் வீழ்வான் விழி நோக்கையிலே 
காரிருள் கருமை நீக்க கண்ணுக்கு மை இட்டவள் 
      சூரியக் கதிர் எடுத்து சுடர் ஏற்றியவள்
வாரியே அன்பை வழங்கும் வள்ளலவள் 
      வானவில்லை வளைத்து கைவளையல் செய்தவள்
பொங்கிவரும் அலையினை கண்ணுக்குள் அடைத்தவள் 
      தங்கிவிடும் சோகம் போக்க தனியே அழுதவள்  
பௌர்ணமியாய் ஒளி வீசும் பூவவள்
      புன்னகையில் புது வாசம் பேசியவள்
ஆதரிப்பாய் என உன்வழி நடந்தவள் 
       சேதாரமென நீ தூக்கி எறிந்தவள் 
தங்கம் வேண்டுமென தாக்கி வதைத்தாய் 
       அங்கம் சிதைத்தாலும் மரித்து போகவில்லை 
வானம் சேரவோ மனது கொள்ளவில்லை 
      மானம் பெரிதென தனதாய் நின்றாள் 
மாறும் உலகிற்கு துணையாய் வந்தாள் 
     பாரும் ஒருநாள் தனதாக்கி வெல்வாள் .....


தொடரும் என் பயணம் ....




காத்திருந்த விழிகளில் கண்ணீர் வழிந்தோட
காயம்பட்ட மனதிற்கு மருந்தாய் உன் நினைவுகள் ...
காற்றிலசையும் பூங்கொடியோ உன் வரவை சொல்ல
கானகத்து தென்றலாய் என் மனதும் லேசாக ....

மாயமாய் வந்து போனாய் மேகத்திரையில்
மாற்றம் கண்டேன் என் விழித்திரையில்
மயக்கும் உந்தன் பேச்சில் மறைந்திட்டேன் நானும்...
மாயவனே ...!! வந்தென்னை கொண்டு செல்வாயோ ??
வாராது என்னை வீழச் செய்வாயோ ???

செதுக்கினேன் உன்னை சிற்பமாய்
        என் உயிரெனும் உளி கொண்டு
        என் உணர்வெனும் ஒளி  தந்து....
வெதும்பினேன் என் சிற்பம் உயிர் பெற
வலி கொண்டு....நாளும் வலி கொண்டு ....
வலி போக்கிச் சென்றாய் ... நீயும்  வளி தந்து ....

பூவை தேடும் வண்டாய் .... நானேனோ
காகிதம் போல் வானில் பறந்தேனோ ??
அதில் கவிதையாய் என் இதயம் மடித்து
தூது ஒன்றை செய்து வைத்தேனோ ....

உனை சேரும் நாள் பார்த்து
விழி நீர் கோர்த்து ,,,,
தொடருது என் பயணம் ...
தேடியே விடியல் தோறும் ....!!





மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...