Saturday, 28 October 2017

தமிழோடு உறவாடி......!!!


தவித்தது என் இதழ்கள் !!
தாகம் உண்டாக்கினாய் ...
வேட்கை தணியேன்
முழுதும் பருகாமல் ....

அலைந்தது என் விழிகள் !!
நிலையாய் நிற்க செய்தாய் ...
திக்கை அறிகிலேன் 
உன்னை விலகாமல் ...

மறந்து  போனது உறக்கமும் 
இரந்து கேட்டன கண்களும் 
இரக்கம் காட்டிட இமைகள் மூடிட !!

எழுதிட துடித்திடும் பேனா முனை 
தழுவிட மறுத்திடும் வண்ண தூரிகை 
நீ கொள்ளை அடித்ததினால் 
வெள்ளை காகிதமாய் மனது!!!

வியந்தது மதி ...பயந்தது தேதி ....
கசந்தது கனியும் ... அசந்தது அணியும் ...

படிப்பது உனையென்றால் வியந்ததில் 
வியப்பேது ??
முடிக்காது வினையில்லையெனில் பயந்ததில் பிழையேது ??
இனிப்பது நீயென்றால் கசந்திடாதோ 
கனியும் !!!
வனப்பு உனதெனில் அசந்திடாதோ அணியும் !!!

அமுதினும் இனிமை நீ என்றான் 
அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சாம்  அதிகம் உனை நான் கொண்டேன் 
அஞ்சேன் நீ நஞ்சாகினும் !!!

அழைப்பது  நீ என்றால் 
சிலையாக நான் இருப்பேனோ ??
வளைத்தது நீ என்றால்
மலையாக  நான் கிடப்பேனோ ??

முதல் காதல்

Related image


அண்ணலும் நோக்கிட அவளும் நோக்கிட 
அஞ்சுகத்தின்  விழி  எய்திய  அன்பில் 
அண்ணலவன்  விரல் எய்திய அம்பில் 
மலர்ந்தது  காவியக்  காதல் !!

பூத்த பருவம்  முதலாய் 
மாயும்  காலம்  வரையில் 
சேர்த்த  அவன்  ஞாபங்களை 
கோர்த்து மாலையாக்கி 
சூடிடும் கன்னி காதல் ...!!

ஈர்த்திடும்  அவள்  அழகில் 
கோர்த்திட  ஏங்கும்  கைகள் 
உதிர்த்திடும்  அவள்  மொழியில் 
அடங்கி  போகும்  காளையர்  காதல் ...!!

காற்று  வீசிட  கண்கள்  உறங்கிட 
தென்றலாய் மனந்தன்னை தீண்டிடும் 
விழித்து  எழுந்ததும் தானாய் 
கலைந்திடும் கனவு காதல் ....!!

சிறு சிரிப்பில்  சிறகடிக்கும்  இதயம் 
குறுஞ்செய்தியில்  மறுபிறப்பெடுக்கும் 
மெலிதாய் துளிர்  விடும்  ; சிலது 
முழுதாய்  மரமாகும்  கல்லூரி  காதல்  ...!!

முதல்  பாதியில்  மையல்  கொள்ளும் 
கானம்  பாடியே மனம் வெல்லும் 
முற்றும் என்றதும்  ஓசை  இல்லாமல் 
மடிந்து போகும்  சினிமா காதல் ....!!

பருவம் எதுவாயினும் 
உருவம் மாறிடினும் 
உறவுகள் தோன்றினும்
உயிர்ப்போடு என்றும் 
மறந்து போகா நினைவுகளாய்
இறந்து போகாத முதல் காதல் ....!!

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...