இறைவன் படைத்த உலகம் இன்று
இரையாய் கேட்கிறது மனிதஉயிரை
கறைகள் துடைக்க கலகம் என்று
இரைந்து சொல்கிறது இயற்கை ....
தேவைக்கேற்ப நீ எடுத்து செல் என்று
வாரி வழங்கியது தன் வளத்தை....
அள்ளி கொடுத்த பின்னும் ஆசை தீரவில்லை
கிள்ளி எடுத்திட சொன்னது மனித மனம் ...
அகல கால் வைத்ததினால் அண்டமே இன்று
அகலாத துயரம் கொண்டது...ஆறாத ரணம்...
மண்ணில் என்னை புதைத்து சென்றாய்
விண்ணில் என்னை வீழ செய்தாய்
காற்றில் என்னை களங்கம் செய்தாய்
நீரில் என்னை மூழ்க செய்தாய்
நெருப்பில் என்னை சிதைத்து விட்டாய்
போதும் என்னை விட்டு விடு
கொஞ்சம் என்னை வாழ விடு
மிஞ்சும் என்னை மீட்டு விடு
உயிலின்றி உறவின்றி கரம் நீட்டி
நீ போன பின்னும் துணை நிற்க
உன் சந்ததிக்கு வினை செய்ய ....!!
