ஊன் உயிர் அதன் ஓசை
மண் சேரும் உன் இசை மேளதாளம் முழங்கும் ஒலியில்
வெள்ளிக்கீற்றின் ஒற்றை ஒளியில்
வான் தரும் மழையின் விளைவோ
வாசம் புதிதாய் மண்ணில் எழுகிறது !!
கருமேகமாய் வானில் நீ..... கார்முகிலே
புதுதேகமாய் பூவில் நீ.....தேன்துளியே
நீர்த்துளியாய் காற்றில் நீ ....தென்றலே
புல்வெளியாய் சேற்றில் நீ..... செம்புலமே
மேகத்திரை விலகும் வரை
ஏங்கும் நீரும் நித்தம் தீரும்
கடல் கைதி வானில் சிறை
விடுதலை பெற்று மண்ணில் விழ
பூமி எங்கும் தூறல் உலா
இதழ் ஓரங்களில் துளியாய் நீ பேசு
அலர் விரிகையில் வாசமாய் நீ வீசு
கருமையில் சிறு தென்றல் துளி விதைத்து
மடைத்திறக்கையில் வெள்ளமாய் நீ
கதைத்திடு மழையே ...!!