Wednesday, 13 May 2020

மழை

ஊன் உயிர் அதன்  ஓசை
மண் சேரும் உன் இசை
மேளதாளம் முழங்கும் ஒலியில்
வெள்ளிக்கீற்றின் ஒற்றை ஒளியில்
வான்  தரும்  மழையின்  விளைவோ
வாசம் புதிதாய் மண்ணில் எழுகிறது !!
கருமேகமாய் வானில் நீ..... கார்முகிலே
புதுதேகமாய் பூவில் நீ.....தேன்துளியே 
நீர்த்துளியாய்  காற்றில் நீ ....தென்றலே
புல்வெளியாய் சேற்றில் நீ..... செம்புலமே
மேகத்திரை  விலகும்  வரை
ஏங்கும்  நீரும்  நித்தம்  தீரும்
கடல் கைதி வானில்  சிறை
விடுதலை பெற்று மண்ணில் விழ
பூமி எங்கும் தூறல் உலா
இதழ்  ஓரங்களில் துளியாய்  நீ  பேசு
அலர்  விரிகையில்  வாசமாய்  நீ  வீசு  
கருமையில்  சிறு  தென்றல் துளி விதைத்து
மடைத்திறக்கையில்  வெள்ளமாய்   நீ 
கதைத்திடு  மழையே ...!!

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...