Wednesday, 24 February 2016

நட்பெனும் உறவு..... என்றும் வளர்பிறையே....





என் அன்புத் தோழியே ....!!!
பூமியென்னும் மேடையிலே வாழப் பிறந்தவளே...
புன்னகை கொண்டு என் நெஞ்சில் ஸ்நேகம்  வளர்த்தவளே...!!

தித்திக்கும் தமிழாய் என் நெஞ்சில் திளைத்தவளே
எத்திக்குச்  சென்றாலும் உன்னை நினைக்கச்  செய்தாயே....!!

சுவாசிக்கும் காற்றாய் மூச்சில் கலந்தவளே...
வாசிக்கும் கவிதையாய் வார்த்தையில் வந்தவளே....!!

மழை மேகமாய் மனதில் சேர்ந்தவளே...
சிலை வடிவாய் சிந்தையில் நின்றவளே...!!

சத்தமின்றி என் இதயத்தை துடிப்பாய் ஆக்கியவளே...
சங்கீதமாய் என்றும் என் வாழ்வில் ஒலிப்பவளே...!!

தித்திக்கும் நினைவுகள் நெஞ்சில் தோன்றினும்....
திகட்டாத இன்பமாய் இனிப்பது உன் நட்பு  தானடி...!!

நிலவெனும் உறவு விடியலில் முடியும் - நம்
நட்பெனும் உறவு என்றும் வளர்பிறையே .....!!!!

Sunday, 21 February 2016

நிஜமாய் நீ ஆனால் .....!!!






துன்பம் வரும் வேளையிலே 
தூயவளே ! உன்னை நினைத்தால்
தூரப் போகுதடி ....

இன்பமான தருணங்களில் 
இனியவளே ! நீ வந்தால் 
இருமடங்குப் பெருகுதடி ...

தோல்வி அடையும்போது 
தோழியே ! நீ வந்தால் 
தூசு போல ஆனதடி.... 

வெற்றி பெறும் போது 
வெண்பூவே ! நீ இருந்தால் 
வானம் சிறியதானதடி....

கனவில் தோன்றிய என் 
   கற்பனையே !! நிஜமாய் நீ ஆனால் 
             நிழலாய் உன்னை தொடர்வேன் .......

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...