Thursday, 25 August 2016

மனதின் தூது





எழுத விழைகிறேன் !!!
மனதில் எண்ணங்கள் ஏதுமில்லை
எனினும் எழுத விழைகிறேன் ...
தினம் காணும் காட்சிகள் விழித்திரையில்
மௌனமாய் கதைப்  பேச ...
விரல்களின் பிடியில் பேனாமுனையின் மைப் பேச ...
நானும் எழுதுகிறேன் எண்ணம் ஏதுமின்றி ...
மகத்துவம் ஏதுமில்லை இதில் ....
மனதின் தவம் தானோ ????
மையல் கொண்டேன் எழுத்தின் மீது
கையில் வரைந்தேன் மனதின் தூது ...!!!

கனவென்னும் பாதையில் நடைபயில !!!

Image result for nature pictures




விசைக்கு இயங்கும் இயக்கமாய் 
வாழ்க்கை மாறிட ..
வசைக்கு பயந்தே தானியங்கியாய் 
தன்னை தேற்றிட ...
ஆசை மறந்து அன்பை விடுத்து 
ஓசைக்கு நகரும் இயந்திரமாய் செவிமடுத்து !!
நரகமாகி போனது நகரம் ....!!!

ஏன் செய்கிறோம் ...??
எதற்காக செய்கிறோம் ...??
என்ன செய்கிறோம் ..??
எவ்வாறு செய்கிறோம் ...??
கேள்விகளுக்கு விடையேயின்றி 
பல நாட்கள் செய்கிறோம் ...
ஆனாலும் செய்கிறோம் !!!

கனவுகள் சிறகு விரித்து பறக்க 
கூண்டுக்குள் அடைப்பட்ட பறவையாய் ...
எத்தனிக்கும் போதெல்லாம் 
இறக்கைகள் வெட்டப்பட்டு ...
ஆனால் பறக்கவும் செய்கிறோம் ....
கனவில் மட்டும் வெகுதூரம் !!!

உதிக்கும் சூரியனின் எழில் காணாது 
மயங்கும் மாலையின் வனப்பை ரசிக்காது 
மதிக்கும் உயிரின் அன்பை அணைக்காது 
உறங்கும் இதயம் கொண்டு 
எதற்கிந்த மனித வாழ்வு ...???
மன்னிக்கவும் இயந்திர வாழ்வு !!!

தகர்த்தெறி நண்பா...தடைகளை இனி ....
கேள்விக் கணைகளுக்கு ....விடையாய் நீ !!!
வாழ்ந்திடு புதியதொரு வாழ்வை 
மனிதனாய் .....!!!!

சாளரம் திறந்திடு 
சங்கீதம் தவழ்ந்து வர ...
ரீங்காரமிடும் வண்டுகளின் 
கீச்சிடும் குருவிகளின் ஒலியில் ....

காலநேரம் கண்டிட கடிகாரம் எதற்கு ???
மாலையில் சூரியன் மறைந்திடும் மேற்கு ..
காரிருள் போக்க வந்திடுமே நட்சத்திரம்...
வான்கூரையின் கீழ் அமைத்திடுவோம் சத்திரம் !!!
வா நண்பா!!!
வாழ்வோம் நாமும் வாழ்வை 
இயற்கையின் துணையில் 
காலம் தாண்டி  வாழும்
காலடிச்சுவடுகளை  பதித்து 
கனவென்னும் பாதையில் நடைபயின்று ...!!!!




ஞாபகத்துளிகள்

நானும் பக்கங்களை புரட்டிப்  பார்க்கிறேன்
உன் ஞாபகத்துளிகள் எங்கேனும்
என் வாழ்க்கைப் புத்தகத்தில்
சிதறி இருக்கிறதா என ....!!!
ஏமாற்றம் தான் எனக்கு மட்டுமல்ல
என் பேனாமுனைக்கும் தான் !!!
எழுத மறந்தவை வார்த்தைகள் மட்டுமல்ல
என் வாழ்வின் வர்ணஜாலங்கள் !!!
இனியேனும் சேமிக்கிறேன் உன் நினைவுகளை
இமைகளில் புகைப்படம் காத்து
இதயத்தில் இரத்தத்துளிகள் கொண்டெழுதி...
பேனாமுனைக்கு தத்து கொடுத்து விடாமல் !!!

எழுத்தும் நானும் ....!!!!!






எழுதுவதில் ஏனோ அலாதி பிரியம் எனக்கு ...
எழுதும்போது  என் பிம்பம் காண்கிறேன்
சிரிக்கும் வார்த்தைகள் சந்தோசமாய்
அழும் வார்த்தைகள் சோகமாய்
ஆறுதல் வார்த்தைகள் தேறுதலாய்
வார்த்தைகள் தேடித்தேடி சேர்க்கிறேன்
என் வாழ்க்கையை வடிவமைக்க
எனக்குள் இருக்கும் நான் என்னையே
 எழுதும்போது  உணர்கிறேன் ....!!!

என் தனிமைக்காலங்களின் துணையாய்
என் இனிமைக்காலங்களில் சுகமாய்
என் சோகங்களில் நிழலாய்
இப்படி என்னுள்ளும் என் ஞாபகங்களிலும்
வந்து வந்து போகும் மாற்றங்களை
சிறை பிடித்து வைக்கும் என் வார்த்தைகளை
எழுதுவது பிடிக்கும் ...!!!!

வார்த்தைக்கடல் வற்றும் வரை
வாழ்க்கையின் அத்தியாயம் முடியும் வரை
எழுதுகிறேன் நான் என்னையும்
என் நினைவுகளையும் !!!!




Wednesday, 24 August 2016

உயிர் பெற காத்திருக்கிறேன்....!!!


Image result for dreams


பிறந்தேன் ....
பிறப்பினால் மட்டுமே நான் உயிர் பெற்று விடுவதில்லை ...
வினாடிகள் நிமிடங்களாய்
நிமிடங்கள்  நாழிகையாய்
வேகமாய் நகர்ந்தன ....
நாட்கள் மாதங்களாய்
மாதங்கள் வருடமாய்
இப்படியே .....
வாழ்க்கை சக்கரமும் சுழன்று கொண்டே
ஆனால் ...
நான் இன்னமும் உயிர் பெறவில்லை ...
ஐந்து வயதில் மழலையாய்
பத்து வயதில் சிறுமியாய்
பதினைந்தில் பருவமெய்தி
மூவெட்டில் மனைவியாய்
உயிர் கொடுத்தேன் நானும்
மன்னிக்கவும் !!!
பிறப்பித்தேன் ஓர் உயிரை....!!
ஆனால் ....
நான் இன்னமும் உயிர் பெறவில்லை ....
எனக்குள்ளே உறங்கும் என் கனவுகளும்
என்னை உறங்க விடாத என் லட்சியங்களும்
என்று நினைவாகுமோ அன்று  உயிர்பெறும்
என்ற நம்பிக்கையில்இன்னமும் நான்...
உயிர் பெற காத்திருக்கிறேன் !!!!





நிலவோடு ஓர் உலா

Image result for moon at night lonely girl



இனிதாய்   ஒரு  பயணம்
இரவோடு நானும்
என்னோடு நிலவும்
சென்றோம் வெகுதூரம் .....
இருளில் ....நிலவின் ஒளியில்
கைகோர்த்து காற்றோடு கலந்து....

காற்றிலே ஆடும் தென்னங்கீற்று
கவிதை பாடும் புதுமொட்டு
ரசித்தேன் இருவிழி விரித்து
நகர்ந்தே போனது
இரவுப்பொழுது ....

கடலின் ஒலியில் நிலவின் துணையில்
இனிமையாய் ஒரு இசைக்கச்சேரி !!!
நிலவை கண்டு அலை பொங்கியதோ ???
அலை பொங்கியதால் நிலவு வந்ததோ ??
நாணம்  வந்ததால் நிலவும் மறைந்ததோ .....
நிலவு மறைந்ததால் அலையும் கலைந்ததோ ...

வாழ்வும் இது போலதானோ !!!
தேடி கிடைத்த பின் தொலைந்து போவோம்
மீண்டும் ஒரு  தேடலில் ....
நானும் தொலைந்தே போனேன்
இரவின் மயக்கத்தில்
விடியும் விடியலைத் தேடி ....!!!!!



 

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...