Saturday, 20 February 2016

வானம் தொட்டுவிடும் தூரம்தான்






வானம் தொட்டுவிடும் தூரம்தான்.
ஆம் ....
வானம் தொட்டுவிடும் தூரம்தான் ....

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அந்நியரின் 
       அடிமைப்பிடியில்  வாழ்ந்த நாம் மீளவில்லையா ???
வறண்ட பூமியாய் இருந்ததை 
       வாழும் பூமியாய் மாற்றவில்லையா ??

கடுகைத் துளைத்துத்தான் வள்ளுவன் 
       இருவரியில் குறள் செய்யவில்லையா ??
அணுவைத் துளைத்துத்தான்  அப்துல்கலாம் 
      ஆழ்கடலை அளக்க வில்லையா ???

இருளில் வாழ்ந்த மனிதன் வெளிச்சத்தைத் 
     தேடி ஒளி ஏற்றவில்லையா   ????

போராட்டம் நிறைந்த இந்த பூமியில் 
       புகழ்உச்சியை  எட்டியவரை  காணும்போது 
           புரிகிறது தொட்டுவிடும் தூரம் தான் வானம் .......!!! 

தேரோட்டமாய் நம் வாழ்வும் சிறந்திட 
      கனவு காண்போம் .... காணும் 
          கனவை நிஜமாக்கிட  முயற்சிப்போம்.....!!!

முயற்சி என்பது மூலதனமானால் 
    முன்னேற்றம் பின்னே வந்து சேரும் ...
       கஷ்டங்கள் என்பது காகிதமானால்  
            வெற்றிகள் அனைத்தும் காவியமாய் மாறும் ....



      

பூக்களாய் புன்னகை செய் ....!!!








பூக்கள் எப்போதும் அழுததில்லை தான்
             உதிரப்போவதை நினைத்து ....
பூச்செடிகள் என்றும் கலங்கியதில்லை பூக்கள்
           மடிந்துப் போவதைக் குறித்து ....
 மீண்டும் பூக்கும் மலர்களை வரவேற்க புன்னகைக்கிறது .

மனித மனமே ...!!! நீ மட்டும் ஏன் அழுகிறாய் ???
தொலைந்து போன இன்பங்களை தேடுவதை விட்டு
வளைந்து கொடுத்து வாழ்வினை வாழப்  பழகிக்கொள் ....

துன்பங்களை தூரப்போடு....
புதியதொரு வாழ்வை வரவேற்க ...
வசந்தகாலம் பூக்களுக்கு மட்டுமல்ல ......
                                                          உனக்கும்தான்.....

வல்லரசு கனவை எதிர்நோக்கி .....






அணுவைக் கொண்டு ஆழ்கடலையும் வானுலகையும் அளந்தாய்!!!
அன்பையும் அறிவையும் கொண்டு மாமனிதனாய் உயர்ந்தாய் !!
இந்தியாவிற்கு வல்லரசு கனவு தந்தாய் !!
விஞ்ஞானத்திற்கு புதியதோர் இலக்கணம் செய்தாய் !!!
தலைக்கணம் இல்லாத் தலைவனே....... !!!
சாய்ந்தாடும் தென்றலும் ஓய்ந்து போனது  
உந்தன் மூச்சு நின்றதாலோ ???
மாய்ந்து போனதாய் எண்ணமில்லை.... மீட்டெடுப்போம்  
உன்னை .....!!!
நீ கண்ட கனவுகளை மெய்யாக்கி ...!!!
உந்தன் பாதச்சுவடுகளை எந்தம் பாதையாக்கி ...!!!.
விடியும் விடியல் உந்தன் வல்லரசு கனவை எதிர்நோக்கி.....!!!! 






Wednesday, 17 February 2016

மௌனம்






வாசிக்க முடியா
வார்த்தைகளால்
வடிவமைக்கபட்ட
மொழி.
மௌனம் 


நிறைவேற்ற
நினைக்கும்
நிஜங்களின்
நிழற்படங்கள்.
- கனவு 

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...