Wednesday, 8 March 2017

பெண்ணெனும் ஓவியம் ....!!!




வெட்கப் புன்னகை கொண்டு
மயக்கிடும் மாயாவி அவள்!!

வெற்றுப் புன்னகையிலும்
ஈர்க்கும்  காந்தவிசை அவள்!!

தாயாய்  அவள் தாலாட்டுவாள்
சேயாய்  இவள் வாலாட்டுவாள் !

தாரமாய் துணை நிற்பாள்
ஆதாரமாய் மனை வந்தவள் !!

தங்கையாய்  அண்ணனை   தோற்பாள்
மங்கையாய்  மண்ணை  வெல்வாள்  !!!

கண்ணிலே அன்பு கொண்டு பேசுவாள்
மண்ணிலே நேசம் கொண்டு தூறுவாள் !

தூரிகையின் நிறங்களென
அவள் குணங்கள்
காரிகையின்  மனம்  பேசும்
மொழியோ  பல வண்ணங்கள் !!

கோபத்திற்கு பின் அன்பும்  உண்டு
அனுதாபத்திலே அத்துமீறலும் உண்டு

அன்பைத் தூறல் போலவும்
பெருமழையெனவும் பொழிபவள் !!!

ஆணென்னும்  காகிதம்  தனிலே
வரைந்திட்ட இவள்
பெண்ணெனும்  ஓவியம் ....!!!


















Tuesday, 7 March 2017

தேடல்





நிகழ்காலங்கள் இறந்தகாலமாய்
எதிர்காலங்கள் நிகழ்காலமாய் 
நொடிக்கு நொடி மாறிக்கொண்டே 
விடியும் இந்த பிரபஞ்சத்தில் 
மாற்றம் தேடுகிறோம் !!!

புதியதொரு உலகைத் தேடி...
புதையலைத் தேடி ....
அன்பைத் தேடி ..
இறுதியில் தொலைந்தே போகிறோம் ....!!!

இருப்பதில்  ஆனந்தம் இல்லை
தொலைத்ததிலோ வருத்தம் கொள்ளை
வாடிய பூக்களால் வசந்தம் வருவதில்லை
நாடிய பூக்களோ தேன்சிந்த மறுத்ததில்லை ......

தேடுவோம் ...!!
தொலைந்து  போய்விடாத தேடலை
தன்னை  தன்னில்  .......
தொலைத்து விடாத தேடலை
தன் இன்மையை
தொலைத்து விடும் விடியலை ....!!!!



தேடுங்கள் பெண்ணில் அன்பை மட்டும்!!!



Image result for woman images art






பெண்ணைப் பூவென்றான்
கசக்கி எரிந்திடத்தானா ?
பெண்ணை நிலவென்றான் 
உலவிடும்போது களவாடத்தானா ?

பெண்ணை கிளியென்றான் 
கூண்டுக்குள் அடைத்திடத்தானா ?
பெண்ணை நதியென்றான் 
அள்ளி பருகிடத்தானா ???

பூத்த  புதுமொட்டும் 
பூப்பெய்திய  சிறுசிட்டும் 
பூமியில் பிறப்பது 
பூட்டி வைத்தே புதைத்திடத்தானா ?

கன்றோ கறவைமாடோ 
காளைக்கு உணவாகத்தானா ?

மூன்று வயதும் மூவாறு வயதும் 
மூர்க்கன் கண்ணுக்கு பேதமில்லையோ ?

மாதர் தம்மை இழிவு செய்யும் 
மடமை தனை  கொளுத்திட வேண்டும் - அது 
மகாகவி பாரதி வாக்கு....

பேதை தனை இழிவு செய்து 
போக்கிட வேண்டும் வன்புணர்ச்சியை - இது 
மக்கள்  சிலர் போக்கு ....

தாவணியிலும் வதைக்கிறாய் 
தமையன் நீயென்றாலும் சிதைக்கிறாய் 
தாரமென ஒருத்தி இருப்பதை  மறக்கிறாய்

போகப் பொருளல்ல அவள் 
உன் போதைக்கு மருந்தாக....
உன் இச்சைக்கு விருந்தாக ....

விலங்கினமே உனை விட மேல் ....
மனிதனாய் மனிதம் உணர்ந்து வாழ் ...

இனியேனும்..... 
பூக்கள் பூக்கட்டும் பூஜைக்காக 
நிலவு ஒளிரட்டும் பௌர்ணமியாய் 
கிளி பறக்கட்டும் சுதந்திரமாய் 
நதி பெருகட்டும் நீர்விழ்ச்சியாய் .....!!!!










மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...