Wednesday, 8 March 2017

பெண்ணெனும் ஓவியம் ....!!!




வெட்கப் புன்னகை கொண்டு
மயக்கிடும் மாயாவி அவள்!!

வெற்றுப் புன்னகையிலும்
ஈர்க்கும்  காந்தவிசை அவள்!!

தாயாய்  அவள் தாலாட்டுவாள்
சேயாய்  இவள் வாலாட்டுவாள் !

தாரமாய் துணை நிற்பாள்
ஆதாரமாய் மனை வந்தவள் !!

தங்கையாய்  அண்ணனை   தோற்பாள்
மங்கையாய்  மண்ணை  வெல்வாள்  !!!

கண்ணிலே அன்பு கொண்டு பேசுவாள்
மண்ணிலே நேசம் கொண்டு தூறுவாள் !

தூரிகையின் நிறங்களென
அவள் குணங்கள்
காரிகையின்  மனம்  பேசும்
மொழியோ  பல வண்ணங்கள் !!

கோபத்திற்கு பின் அன்பும்  உண்டு
அனுதாபத்திலே அத்துமீறலும் உண்டு

அன்பைத் தூறல் போலவும்
பெருமழையெனவும் பொழிபவள் !!!

ஆணென்னும்  காகிதம்  தனிலே
வரைந்திட்ட இவள்
பெண்ணெனும்  ஓவியம் ....!!!


















No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...