நிகழ்காலங்கள் இறந்தகாலமாய்
எதிர்காலங்கள் நிகழ்காலமாய்
நொடிக்கு நொடி மாறிக்கொண்டே
விடியும் இந்த பிரபஞ்சத்தில்
மாற்றம் தேடுகிறோம் !!!
புதியதொரு உலகைத் தேடி...
புதையலைத் தேடி ....
அன்பைத் தேடி ..
இறுதியில் தொலைந்தே போகிறோம் ....!!!
இருப்பதில் ஆனந்தம் இல்லை
தொலைத்ததிலோ வருத்தம் கொள்ளை
வாடிய பூக்களால் வசந்தம் வருவதில்லை
நாடிய பூக்களோ தேன்சிந்த மறுத்ததில்லை ......
தேடுவோம் ...!!
தொலைந்து போய்விடாத தேடலை
தன்னை தன்னில் .......
தொலைத்து விடாத தேடலை
தன் இன்மையை
தொலைத்து விடும் விடியலை ....!!!!
புதையலைத் தேடி ....
அன்பைத் தேடி ..
இறுதியில் தொலைந்தே போகிறோம் ....!!!
இருப்பதில் ஆனந்தம் இல்லை
தொலைத்ததிலோ வருத்தம் கொள்ளை
வாடிய பூக்களால் வசந்தம் வருவதில்லை
நாடிய பூக்களோ தேன்சிந்த மறுத்ததில்லை ......
தேடுவோம் ...!!
தொலைந்து போய்விடாத தேடலை
தன்னை தன்னில் .......
தொலைத்து விடாத தேடலை
தன் இன்மையை
தொலைத்து விடும் விடியலை ....!!!!

No comments:
Post a Comment