Tuesday, 7 March 2017

தேடல்





நிகழ்காலங்கள் இறந்தகாலமாய்
எதிர்காலங்கள் நிகழ்காலமாய் 
நொடிக்கு நொடி மாறிக்கொண்டே 
விடியும் இந்த பிரபஞ்சத்தில் 
மாற்றம் தேடுகிறோம் !!!

புதியதொரு உலகைத் தேடி...
புதையலைத் தேடி ....
அன்பைத் தேடி ..
இறுதியில் தொலைந்தே போகிறோம் ....!!!

இருப்பதில்  ஆனந்தம் இல்லை
தொலைத்ததிலோ வருத்தம் கொள்ளை
வாடிய பூக்களால் வசந்தம் வருவதில்லை
நாடிய பூக்களோ தேன்சிந்த மறுத்ததில்லை ......

தேடுவோம் ...!!
தொலைந்து  போய்விடாத தேடலை
தன்னை  தன்னில்  .......
தொலைத்து விடாத தேடலை
தன் இன்மையை
தொலைத்து விடும் விடியலை ....!!!!



No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...