கைப் பிடித்து வழி செல்வான்
கணவனும் அல்ல .....
தோள் சாய்ந்து கதை அளப்பான்
காதலனும் அல்ல ....
தலைக் கோதி ஆறுதல் சொல்வான்
தந்தையும் அல்ல ....
அலைய வைத்து வம்பு செய்வான்
தமையனும் அல்ல ...
ரத்தத்தில் வந்த சொந்தம் இதுவல்ல !!!
மொத்தத்தில் இந்த உறவுக்கு உருவம் இல்லை !!!
நீரைப் போல் சேரும் குணம் உண்டு
நண்பன் என்று அவனுக்கு பெயரும் உண்டு !!!!