Saturday, 20 February 2016

பூக்களாய் புன்னகை செய் ....!!!








பூக்கள் எப்போதும் அழுததில்லை தான்
             உதிரப்போவதை நினைத்து ....
பூச்செடிகள் என்றும் கலங்கியதில்லை பூக்கள்
           மடிந்துப் போவதைக் குறித்து ....
 மீண்டும் பூக்கும் மலர்களை வரவேற்க புன்னகைக்கிறது .

மனித மனமே ...!!! நீ மட்டும் ஏன் அழுகிறாய் ???
தொலைந்து போன இன்பங்களை தேடுவதை விட்டு
வளைந்து கொடுத்து வாழ்வினை வாழப்  பழகிக்கொள் ....

துன்பங்களை தூரப்போடு....
புதியதொரு வாழ்வை வரவேற்க ...
வசந்தகாலம் பூக்களுக்கு மட்டுமல்ல ......
                                                          உனக்கும்தான்.....

No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...