Wednesday, 24 August 2016

உயிர் பெற காத்திருக்கிறேன்....!!!


Image result for dreams


பிறந்தேன் ....
பிறப்பினால் மட்டுமே நான் உயிர் பெற்று விடுவதில்லை ...
வினாடிகள் நிமிடங்களாய்
நிமிடங்கள்  நாழிகையாய்
வேகமாய் நகர்ந்தன ....
நாட்கள் மாதங்களாய்
மாதங்கள் வருடமாய்
இப்படியே .....
வாழ்க்கை சக்கரமும் சுழன்று கொண்டே
ஆனால் ...
நான் இன்னமும் உயிர் பெறவில்லை ...
ஐந்து வயதில் மழலையாய்
பத்து வயதில் சிறுமியாய்
பதினைந்தில் பருவமெய்தி
மூவெட்டில் மனைவியாய்
உயிர் கொடுத்தேன் நானும்
மன்னிக்கவும் !!!
பிறப்பித்தேன் ஓர் உயிரை....!!
ஆனால் ....
நான் இன்னமும் உயிர் பெறவில்லை ....
எனக்குள்ளே உறங்கும் என் கனவுகளும்
என்னை உறங்க விடாத என் லட்சியங்களும்
என்று நினைவாகுமோ அன்று  உயிர்பெறும்
என்ற நம்பிக்கையில்இன்னமும் நான்...
உயிர் பெற காத்திருக்கிறேன் !!!!





No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...