எழுத விழைகிறேன் !!!
மனதில் எண்ணங்கள் ஏதுமில்லை
எனினும் எழுத விழைகிறேன் ...
தினம் காணும் காட்சிகள் விழித்திரையில்
மௌனமாய் கதைப் பேச ...
நானும் எழுதுகிறேன் எண்ணம் ஏதுமின்றி ...
மகத்துவம் ஏதுமில்லை இதில் ....
மனதின் தவம் தானோ ????
மையல் கொண்டேன் எழுத்தின் மீது
கையில் வரைந்தேன் மனதின் தூது ...!!!
No comments:
Post a Comment