
விசைக்கு இயங்கும் இயக்கமாய்
வாழ்க்கை மாறிட ..
வசைக்கு பயந்தே தானியங்கியாய்
தன்னை தேற்றிட ...
ஆசை மறந்து அன்பை விடுத்து
ஓசைக்கு நகரும் இயந்திரமாய் செவிமடுத்து !!
நரகமாகி போனது நகரம் ....!!!
ஏன் செய்கிறோம் ...??
எதற்காக செய்கிறோம் ...??
என்ன செய்கிறோம் ..??
எவ்வாறு செய்கிறோம் ...??
கேள்விகளுக்கு விடையேயின்றி
பல நாட்கள் செய்கிறோம் ...
ஆனாலும் செய்கிறோம் !!!
கனவுகள் சிறகு விரித்து பறக்க
கூண்டுக்குள் அடைப்பட்ட பறவையாய் ...
எத்தனிக்கும் போதெல்லாம்
இறக்கைகள் வெட்டப்பட்டு ...
ஆனால் பறக்கவும் செய்கிறோம் ....
கனவில் மட்டும் வெகுதூரம் !!!
உதிக்கும் சூரியனின் எழில் காணாது
மயங்கும் மாலையின் வனப்பை ரசிக்காது
மதிக்கும் உயிரின் அன்பை அணைக்காது
உறங்கும் இதயம் கொண்டு
எதற்கிந்த மனித வாழ்வு ...???
மன்னிக்கவும் இயந்திர வாழ்வு !!!
தகர்த்தெறி நண்பா...தடைகளை இனி ....
கேள்விக் கணைகளுக்கு ....விடையாய் நீ !!!
வாழ்ந்திடு புதியதொரு வாழ்வை
மனிதனாய் .....!!!!
சாளரம் திறந்திடு
சங்கீதம் தவழ்ந்து வர ...
ரீங்காரமிடும் வண்டுகளின்
கீச்சிடும் குருவிகளின் ஒலியில் ....
காலநேரம் கண்டிட கடிகாரம் எதற்கு ???
மாலையில் சூரியன் மறைந்திடும் மேற்கு ..
காரிருள் போக்க வந்திடுமே நட்சத்திரம்...
வான்கூரையின் கீழ் அமைத்திடுவோம் சத்திரம் !!!
வா நண்பா!!!
வாழ்வோம் நாமும் வாழ்வை
இயற்கையின் துணையில்
காலம் தாண்டி வாழும்
காலடிச்சுவடுகளை பதித்து
கனவென்னும் பாதையில் நடைபயின்று ...!!!!
அருமையான பதிவு.. உதிக்கும் சூரியனின் எழில் காணாது.மற்றும்.. அதை தொடர்ந்து வரும் வரிகளும் அருமை..
ReplyDelete