இனிதாய் ஒரு பயணம்
இரவோடு நானும்
என்னோடு நிலவும்
சென்றோம் வெகுதூரம் .....
இருளில் ....நிலவின் ஒளியில்
கைகோர்த்து காற்றோடு கலந்து....
காற்றிலே ஆடும் தென்னங்கீற்று
கவிதை பாடும் புதுமொட்டு
ரசித்தேன் இருவிழி விரித்து
நகர்ந்தே போனது
இரவுப்பொழுது ....
கடலின் ஒலியில் நிலவின் துணையில்
இனிமையாய் ஒரு இசைக்கச்சேரி !!!
நிலவை கண்டு அலை பொங்கியதோ ???
அலை பொங்கியதால் நிலவு வந்ததோ ??
நாணம் வந்ததால் நிலவும் மறைந்ததோ .....
நிலவு மறைந்ததால் அலையும் கலைந்ததோ ...
வாழ்வும் இது போலதானோ !!!
தேடி கிடைத்த பின் தொலைந்து போவோம்
மீண்டும் ஒரு தேடலில் ....
நானும் தொலைந்தே போனேன்
இரவின் மயக்கத்தில்
விடியும் விடியலைத் தேடி ....!!!!!
No comments:
Post a Comment