Wednesday, 24 August 2016

நிலவோடு ஓர் உலா

Image result for moon at night lonely girl



இனிதாய்   ஒரு  பயணம்
இரவோடு நானும்
என்னோடு நிலவும்
சென்றோம் வெகுதூரம் .....
இருளில் ....நிலவின் ஒளியில்
கைகோர்த்து காற்றோடு கலந்து....

காற்றிலே ஆடும் தென்னங்கீற்று
கவிதை பாடும் புதுமொட்டு
ரசித்தேன் இருவிழி விரித்து
நகர்ந்தே போனது
இரவுப்பொழுது ....

கடலின் ஒலியில் நிலவின் துணையில்
இனிமையாய் ஒரு இசைக்கச்சேரி !!!
நிலவை கண்டு அலை பொங்கியதோ ???
அலை பொங்கியதால் நிலவு வந்ததோ ??
நாணம்  வந்ததால் நிலவும் மறைந்ததோ .....
நிலவு மறைந்ததால் அலையும் கலைந்ததோ ...

வாழ்வும் இது போலதானோ !!!
தேடி கிடைத்த பின் தொலைந்து போவோம்
மீண்டும் ஒரு  தேடலில் ....
நானும் தொலைந்தே போனேன்
இரவின் மயக்கத்தில்
விடியும் விடியலைத் தேடி ....!!!!!



 

No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...