Thursday, 25 August 2016

ஞாபகத்துளிகள்

நானும் பக்கங்களை புரட்டிப்  பார்க்கிறேன்
உன் ஞாபகத்துளிகள் எங்கேனும்
என் வாழ்க்கைப் புத்தகத்தில்
சிதறி இருக்கிறதா என ....!!!
ஏமாற்றம் தான் எனக்கு மட்டுமல்ல
என் பேனாமுனைக்கும் தான் !!!
எழுத மறந்தவை வார்த்தைகள் மட்டுமல்ல
என் வாழ்வின் வர்ணஜாலங்கள் !!!
இனியேனும் சேமிக்கிறேன் உன் நினைவுகளை
இமைகளில் புகைப்படம் காத்து
இதயத்தில் இரத்தத்துளிகள் கொண்டெழுதி...
பேனாமுனைக்கு தத்து கொடுத்து விடாமல் !!!

No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...