Thursday, 25 August 2016

எழுத்தும் நானும் ....!!!!!






எழுதுவதில் ஏனோ அலாதி பிரியம் எனக்கு ...
எழுதும்போது  என் பிம்பம் காண்கிறேன்
சிரிக்கும் வார்த்தைகள் சந்தோசமாய்
அழும் வார்த்தைகள் சோகமாய்
ஆறுதல் வார்த்தைகள் தேறுதலாய்
வார்த்தைகள் தேடித்தேடி சேர்க்கிறேன்
என் வாழ்க்கையை வடிவமைக்க
எனக்குள் இருக்கும் நான் என்னையே
 எழுதும்போது  உணர்கிறேன் ....!!!

என் தனிமைக்காலங்களின் துணையாய்
என் இனிமைக்காலங்களில் சுகமாய்
என் சோகங்களில் நிழலாய்
இப்படி என்னுள்ளும் என் ஞாபகங்களிலும்
வந்து வந்து போகும் மாற்றங்களை
சிறை பிடித்து வைக்கும் என் வார்த்தைகளை
எழுதுவது பிடிக்கும் ...!!!!

வார்த்தைக்கடல் வற்றும் வரை
வாழ்க்கையின் அத்தியாயம் முடியும் வரை
எழுதுகிறேன் நான் என்னையும்
என் நினைவுகளையும் !!!!




No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...