Wednesday, 20 March 2019

வாழ்த்துக்கள்


தினம் பூக்கும் புது மலராய்
மனம் வீசும் நறுமலரே !!
அகமகிழ்ந்து முகம் மலர்ந்து
புன்னகை ஒளி வீசும் நிலவே ..!!!

புதிதாய் ஒரு அத்தியாயம்
புனைய போகும் இந்நாளில் ....

கவிதையில் வாழ்த்து கூற
நானும் கவி என நினைத்து
வார்த்தை தேடலில்...

புவி முழுதும் மாற
வானும் வந்ததோ  மண்ணிற்கு
கார்மேக சாயலில் ...

தேடிய வார்த்தையில் உனக்காய்
வரைந்த வாழ்த்தை
தவழ்ந்து வரும் மேகத்தின்
மழைத்துளியில் அனுப்பினேன் ...

பிரித்து படிக்கும் முன்னே
மறைத்து வைத்த புன்னகை
எட்டி பார்க்க வேண்டும் இதழிலே ...
என்றும் உன் வாழ்விலே .....



No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...