Wednesday, 20 March 2019

நினைவுகள்




என்றாவது ஒரு நாள்
எங்காவது நீ பார்த்து
பூக்கும் புன்னகைக்கு விலை அதிகம்
அருகில் இருந்தும்
அரவணைக்காத உன் அன்பிற்கு ....
நீ கொடுத்து சென்ற நிமிடங்கள்
நீ சென்றதை விடவும்
வினாடிகளில் தொலைந்து போனது ...
மயிலிறகாய் எனை வருடும்
உன் நினைவுகளுக்கு
எப்படி சொல்லுவேன்  என்
உயிர் பறிக்கும் ஆயுதம் நீ என்று ???
விட்டுச் சென்ற உன்
நினைவுகளை இன்னமும்
சுமந்து கொண்டிருக்கிறேன் ...
ஜனிக்காத பிள்ளையை
தாய் சுமப்பது போல....
தீண்டி செல்லும் காற்று
மூச்சை திருடி சென்றால்
சுகம் காண்பேன் ....

நினைவுகள்



No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...