Wednesday, 20 March 2019

மலைத்திடும் இயற்கை

வான்  சிந்திய  மழைத்துளியில்
நனைந்த  பச்சைக்கொடிகள்
இச்சையோடு  பெற்றெடுத்தனவோ
தேன் சிந்தும்  மழலையை  !!

தேன் சிந்தும் மலரிதழில்
பசியாறி பல்லுயிர் பெருக்க
தான் தேடி வந்தனவோ
ருசியறிந்த வண்ண சிறகுகள் !!!

சிறகுகளில் சிக்கிய மகரந்தங்கள்
காற்றோடு கதை பேசி
சேறோடு விதையாகி வளர்ந்தனவோ
நிழல் தரும் விருட்ஷமென !!!

விருட்சத்தின் நிழலில் இளைப்பாற
விருந்தானது வீசிடும் காற்று ...
மருந்தும் தேவையோ மலைத்திடும்
இயற்கையோடு வாழ்ந்திடும் வாழ்வில் !!

No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...