Wednesday, 20 March 2019

மீட்டெடுக்கிறேன்

காற்றுக்கு அசையாக் கொடியாய் என் நெஞ்சம்
அசைந்து கொடுத்தது உன்னிடத்தில் ....
பாறை இடுக்கில் முளைவிட்ட செடியாய்
என் இதயத்தில் நீ மலர்ந்தாய் சிறு பூவே !!!

விதைக்கப்படாமல் முளைத்து விட்டதால் என் நெஞ்சில்
வேரில்லாமல் நிலைத்து விட்டாய் ...
களங்கமில்லா உன் அன்பால் நிலவு
தேய்வது கூட எனக்குத் தோன்றவில்லை ...
என்றும் ஒளி வீசுகிறது பௌர்ணமியாய் .....!!!!

என் இதயவானில் ஒளி வீசும் நிலவு நீ !
என் கனவுத் தோட்டத்தில் கால் பதித்த முதல் பூ நீ !!

உன்னைப் பார்க்க கண்கள் ஏங்கவில்லை
பார்த்த பின்போ தூங்கவில்லை -
உறக்கம் கொடு கண்ணே என் விழிகளுக்கு !

பட்டுக் கரங்களைத் தொட்டுப் பேசியபோது
மனதில் எழாத எண்ணம்
எட்டு வைத்து நடந்த போது சொல்கிறது
என்றும் உன் கரம் கோர்த்து நடக்க .....

பழகிய நாட்களில் துடிக்காத உள்ளம்
விட்டு விலகிய போது துடிக்கிறது ...
உன் மீதான என் காதலை உணர்த்திட .....

என் இரவுத் தோட்டத்தில்
பல கனவுப் பூக்கள்
மலர்ந்து உதிர்ந்து போயின ....
என்றும் உதிரா மலராய்
என் கனவில் மலர்ந்து
என்னுள்ளே வாசம் செய்கிறாய் நீ !!

கனவில்
என்னோடு நீ வாழும்
ஒரு அத்தியாயம் புதிதாய்
உன்னோடு நான் தொடங்க ஆசைதான் ...!!!
எனினும் உன்னிடத்தில் சொல்லாது
என் இதயம் மட்டும் மானசீகமாய்
வாழும் உன்னோடு எப்போதும்....!!!

சில நேரங்களில் உன் மௌனம் கூட
எப்போதும் வேண்டும் என யாசிக்கிறேன்
என்னை வேண்டாம் என்று உன் இதழ்கள்
மறுத்திடுமோ என்ற அச்சத்தில் ....!!

பல நேரங்களில் உன் உரையாடல்களில்
நான் தொலைந்தே போகிறேன்
மீண்டும் என்னை மீட்டெடுக்கிறேன்....
மறுபடியும் தொலைந்திடவே !!!

விருப்பம்தான்
வாழ்நாள் முழுதும்
உன்னில் நானும் என்னில் நீயும்
தொலைந்து  விட ....!!!



No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...