Wednesday, 20 March 2019

தேசியக்கொடி

பண்பாடுள்ள பாரம்பரியம் ....
எண்ணிலா வளம் ...
எழுத்தில் முடியா  திறம் ...
எளிதில் அடங்கா வீரம் ....
சீர் தூக்கின் வான் எட்டும் துலாபாரம் ...
பார் நோக்கின் கை தட்டும் கலாச்சாரம் ...
வளம் கண்டே வீசினர் வலையை
பணம் கொண்டே பேசினர் விலையை
களம் சென்றே எதிர் நோக்கினர் நிலையை
பலம் கொண்டே தாக்கினர் தலையை .....!!
தாய் நாட்டிலே  அடிமைகளாய்...
வாய் பேசாத ஊமைகளாய் ....
பொறுமை காத்தான் ....
நிலை  மாறவில்லை 
பொங்கி எழுந்தான் ... !!!
போராட்டம் விடியும்  வரை ....
பனிமூட்டம் விலகும் வரை ....
வயல் வெளிகள் யுத்தகளங்களாய்
வான்வெளியில் ரத்தநிறங்கள் ....!!!
இழந்தான் உயிரை ....
விதைத்தான் பயிரை ...
முளைக்கும் உயிர் வேரூன்றி மரமாய் ..
தழைக்கும் பயிர் பயமின்றி தரமாய் ..
புது விடியல் தேடி ....
புது சுவாசம் தேடி .....
புது விலாசம் தேடி ...
அடைந்தான் சுதந்திரம் ....
வீரம்  கொண்டே இன்னுயிரை 
தியாகம் செய்தோர்க்கு திலகமென  காவியாய் ...!!
சத்தியம் என்றும் வெல்லும்
தூய்மை குணம் கொண்டதென வெண்மையாய் ...!!!
வளம் கொழிக்கும் பூமி
வற்றாதென  நிலம் செழிக்கும் 
பசுமையாய் ....
சுழலும் நாட்கள் தினம்
கழியும் மூவெட்டு நேரமென
சக்கரமாய் ....
வடிவமைத்தானோ தேசியக்கொடியை ....!!!

No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...