Wednesday, 20 March 2019

பெற்றோர்

வலிகள் அவனுள்ளே  இருந்த போதும்
விழிகள் பேசியதில்லை
வழித்துணையாய்  என்றும்
துணை வரும் - இவன் மொழி

புன்னகைக்க மட்டுமே கற்றுக் கொண்டவள்
என் முன்னே
கண்ணீர்துளிகளை காற்றுக்கு மட்டும்
தத்து கொடுத்தவள்- இவள்

தோற்றங்கள் மாறினும்
ஏற்றங்கள் காண்பினும்
வருடங்கள் ஓடியும்
வயது கூடியும்
வாழ்வில் என்றும்
இவனுக்கு துணையாய் இவள் !!
இவளுக்கு இணையாய் இவன் !!

பூமியில் நானும் பூக்க காரணம் - இவர்கள்
பெற்றெடுத்தவள் - இவள்
கற்று கொடுத்தவன்  - இவன்




No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...