Friday, 22 March 2019

கவிதை





உதிக்கும் சூரியனோடு உரையாடி கொஞ்சம்
மதிக்கும் மனிதத்தின் மனதோடு கொஞ்சம்
பறக்கும் சிறகுகளின் பரவசத்தில் கொஞ்சம் 
சிரிக்கும் பூக்களின் இதழோடு கொஞ்சம் 
ஆர்ப்பரிக்கும் கடலின் அலையோடு கொஞ்சம் 
கண்பறிக்கும் சிலையின் கலையோடு கொஞ்சம்
வளைந்த வானவில்லின் வண்ணத்தில்  கொஞ்சம் 
விளைந்த பூமியின் பசுமையில் கொஞ்சம்
சீரும் மனதின் சீற்றங்களில் கொஞ்சம் 
கோரும் புது மாற்றங்களில் கொஞ்சம் 
கதைத்த சொல்லின் கதைகளில் கொஞ்சம் 
விதைத்த வினையின் விதியாய் கொஞ்சம் 
கட்டிய மாளிகையின் மமதையில் கொஞ்சம்
பூட்டிய சிறையின் வெறுமையில் கொஞ்சம்
கற்ற வேதங்களின் அறிவாய் கொஞ்சம் 
மற்ற வேதனைகளின் விலையாய் கொஞ்சம் 
விழி எய்திடும் அம்பில் கொஞ்சம்
மொழி செய்திடும் வம்பில் கொஞ்சம் 
மறந்திட கொஞ்சம் மாய்த்திட கொஞ்சம் 
துறந்திட கொஞ்சம் துதித்திட கொஞ்சம் 
சொற்படி  கொஞ்சம் சுயமாய் கொஞ்சமென 
கொஞ்சம் பார்த்து கொஞ்சம் கேட்டு
கொஞ்சம் உணர்ந்து கொஞ்சம் வியந்து 
கொஞ்சும் தமிழில்  நான் அனுபவித்ததை 
வஞ்சமின்றி வயலில்  விதைத்திட்ட 
விதை - வார்த்தை 
நெஞ்சம் நிறைந்திட விளைந்திட்ட  
விளைச்சல் - கவிதை !!

No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...