Wednesday, 20 March 2019

மெய்யன்பு

நாடக மேடையென்றே எழுதிட்டான்
நடித்திட கதையொன்றை வகுத்திட்டான் ...

மனித முகமோ மாறுபடும் - இதில்
மனமோ முற்றிலும் வேறுபடும் !!

சிரித்திடும் அவன் முகம் - சிந்தித்திடு ..
தரித்திடும் அவன் வேஷம் கண்டு !!

காரியம் நடத்திட நடித்திடுவான் - அவன்
காலும் கையுமே பிடித்திடுவான் !!

பொழிந்திடும் அன்பிலே பொய்மையுண்டு - அவனின்
நெகிழ்ந்திடும் பேச்சிலே கயமையுண்டு !!

தெளிந்த நீரென தெரிந்திடுவான் - நீ
களித்து பருகிட்டால் கலங்கிடுவான் !!!

தேவதை அவளென நினைத்திடுவாய் -
தேள் போல் அவளும் கொட்டிடுவாள் ...!!

பூவென்று எடை குறைவாய் மதிப்பிட்டால்
புயலென்று தடை நீக்கி வதைத்திடுவாள்  !!

புறத்தே கண்டு புரிந்திடாதே ...
அகத்தை உணராது சரிந்திடாதே !!!!

எந்திர வாழ்வில் இதயம் துடித்திடுமா
பிறர்க்காய்??
மந்திரம் செய்தாலும் நிகழுமோ
அவ்வற்புதமே !!!

பொதுவாய் இது சிலர் குணம் ....
சாதுவாய் இருப்பது அலர் மனம் ..

மெய்யன்பை தேடியே அலையாதே ...
உன்னுள்ளே ஒளிந்திருக்கும்  தொலையாதே ..
உண்மையாய் வருந்திட்டால் களையேது ??
தன்மையாய் இருந்திட்டால் பிழையேது ???

 

No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...