Wednesday, 20 March 2019

தோழமை

முகம் பார்க்கும் முன்னே
முகவரி தெரியும் முன்னே
முதல்வரியில் பெயர் கண்டே
நண்பன் என தேர்ந்தேன் !!

கண்ட நாள் முதலாய்
காணும் நாள் வரையில்
காணாத பொழுதிலும்
துணையாய் என்றும் நீ
தோழன் என நின்றாய் !!!

சோகங்களில் மனம் தேடிய
குரல் உனது தான்
சமயங்களில் என்னை தேற்றும்
ஆறுதல் நீ தான்
நான் சுடர் எனினும்
தூண்டுகோல் நீ தான் .....!!!

நான் நானாக இருப்பதை
விரும்பியவன்...
என் எண்ணங்களை செயல்களில்
மெருகேற்றியவன்...
எனக்குள் இருக்கும் என்னை
அறியவைத்தவன்....

என் தொடக்கங்களில்
உன் தோழமை
துணை பலம் .....!!!

என் வார்த்தைகளில்
உன் பிரிவு
விலை அதிகம் ...!!!





No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...