Wednesday, 20 March 2019

புத்தாண்டெனும் தாய்

நினைவுகளோடு கரைந்து செல்லும்
ஒவ்வொரு நாளின் முடிவிலும் பூக்கிறது
நித்தம் புது  கனவுகளோடு  புதிதாய் 
ஒரு விடியல்  புன்னகையோடு ....
நில்லாமல் ஓடிய  நிமிடங்களின்
சொல்லாமல் போன கதைகள்  !!
செல்லரித்து போய்விடும் 
சின்னஞ்சிறு சண்டைகள் !!
வாஞ்சை சிரிப்போடு
வஞ்சனையில்லா உள்ளங்கள் !!!
களவு போன பொழுதுகளில் 
நெஞ்சை களவாடிய இதயங்கள் !!
உலா போன  நிலவோடு
உறைந்து போன உதயங்கள் !!!
கற்பனைகளோடு  காற்றிலே
மிதந்த காலங்கள் !!!
சொப்பனங்கள் சோதனைகளாகி
நிகழ்ந்த  ஓலங்கள் !!!
என  தினம்  மரணித்த நிமிடங்கள்
ஜனித்தன  கடந்த  வருடத்தின்  நினைவுகளாய் ....!!!!
இதழ்களின் குறுஞ்சிரிப்பில்
இதயங்கள் இதழ் விரிக்க.....
நிகழ்வுகளின் சேகரிப்பில்
நினைவுகள் அதிகரிக்க ......
மீண்டும் பிரசவிக்க காத்திருக்கும்
புது வருடம் !!!

No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...