நீலக் கம்பளமாம் வானம்
நிகழ்ந்தது தன்னிலோர் அற்புதம்
நொடிப் பொழுதேனும் நிறைந்திடும்
நெஞ்சம் காணும் நேரம்
ஏழுவண்ணப் பட்டு உடுத்தி
எழிலாய் உலா வந்தாள்
எட்டா உயரத்தே எவர்
வரைந்த ஓவியமோ ??
எட்டிப் பிடிக்கும் முன்னே
மறைந்திடும் காவியமோ ??
களவு போன பொழுதின் ஞாபகங்களாய்... பயணித்த பாதையின் சுவடுகளாய் ... மௌனமாய் இதயம் தீண்டிடும் ... எண்ணங்கள் இங்கே எழுத்துக்களாய்!!!
கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட விண்ணும் மண்ணும் சேர்த்து பூமிக்குள் சொர்க்கம் படைத்தார் இயற்கை அன்னை ....!!! பச்சை பு...
No comments:
Post a Comment