Friday, 18 March 2016

விடை சொல் நட்பே ....!!





நட்பே ....!!!

காற்றாய்  நீ ....!!என் வாழ்வில்  வீசிப் போனாய்
உன்னைப் பிரிந்தால் சுவாசம் வாசமின்றிப் போகும் ...

பூக்களாய்  நீ ....!!என் வாழ்வில் பூத்து விட்டாய்
நீ வாடினால் என் மனமும் உதிர்ந்துவிடும்....

நிலவாய் நீ....!! வந்து போனதால் என் வாழ்வில்
சிலநேரம் என் வானம் இருட்டி விடுகிறது.....

மழையாய் நீ...!! என்னை பிரிந்து பூமிக்கு வந்ததால்
மேகமாய் இருந்த நான் மறைந்து போனேன் ...

வெயிலாய் நீ...!!என்னை சுட்டெரித்தாலும்
வேதனையை குறைத்து சென்றாய்....

பகலாய் நீ....! ஒளிர்ந்து நின்றாய்
இரவாய் நீ....! நின்று ஒளிர்ந்தாய்
வானவில்லாய்  நீ ....!! வளைந்து வந்தாய்

மாறாத வானிலையாய் என்று என்
வாழ்வில் நீ வாழ்ந்து போவாய் .....????

விடை சொல் நட்பே ....
விடைப் பெறுகிறேன் என்று மட்டும் சொல்லாதே ....!!!!
                             

No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...