Friday, 18 March 2016

நட்புக்கு தெரிவதில்லை ....!!!


Image result for different roses images


சொந்தங்கள் அனைத்தும் போகும் தொலைவிலே
       தோள்சாயும்  நட்பின் அன்பிலே...
சாதிக்கும் போதெல்லாம் தட்டிக்கொடுக்கையிலே
       வாதிடும்  போதோ வார்த்தையிலே...
தடுமாறும் நேரம் வாழ்க்கைத்  தடமாறமாலே
         வழிமாற்றும்  மனம் தேற்றும் ....
                              நட்புக்கு....
தெரிவதில்லை ஏனோ  என்று  பூப்பதென்று ....

கால்சட்டை அணியத்  துவங்கிய பருவத்திலே
      மழைக்கு முளைக்கும் காளானாய்...
 கண்கள் கலங்கும் துளி ஈரத்திலே
       விரல்கள் மாறும் கைக்குட்டையாய் ...
சரித்திரம் அதிலே புதியதொரு அத்தியாயமாய்
     வரைந்திட்டால்  என்றும் புன்னகைக்கும்  ஓவியமாய்
                           மாறும்  நட்புக்கு....
தெரிவதில்லை ஏனோ எப்படி பூப்பதென்று ....

வாழ்க்கையில்அவ்வப்போது மலர்ந்திடும்
         சின்ன சண்டைகள் சித்திரப் புன்னகைகள்
வண்ண கனவுகள்  வட்டமிடும் நினைவுகள்
         செல்ல கோபங்கள் நல விசாரிப்புகள் என
                      வாழும் நட்புக்கு...
தெரிவதில்லை ஏனோ எவ்வாறு  பூப்பதென்று  ....

நில்லாமல் ஓடும் நாட்களாய்
        தினமும் நீளும் தொடர்கதை இதுவோ ....??


   





No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...