Sunday, 29 March 2020

மீள்கிறது உலகம்


நுண்கிருமி ஒன்றை உயிரை கடத்தி செல்ல
உலகை திருத்தி செல்ல படைத்து சென்றான் ...
வான்வெளியில் அது விண் கடந்து மண் அளந்து
பூமி எங்கும் சிதறி கிடக்கின்றது ....
உயிரை மீட்டெடுக்க உலகை மீட்டெடுக்க
பெரும்போர் நடக்கின்றது ....உலகம் தவிக்கின்றது

சாதி மத பேதம் களைந்து
உயர்ந்தவன் தாழ்ந்தவன் எல்லாம் துறந்து
உதவிக்கரம் கேட்டு  காத்திருக்கிறான் ....
யார் எவர் எல்லாம் மறந்து
விழி திறந்து வாழ்வை காக்க
உறக்கம் தொலைத்து உறவை தவிர்த்து
விடியல் நோக்கி சேவை செய்யும் மக்கள் ..
மனிதன் வீழுகிறான் ..... மனிதம் விழிக்கிறது

அலுவலக கட்டிடங்கள் அங்கு அனாதையாய்
இயங்கிய இயந்திரங்கள் உயிர்ப்பின்றி உறங்க
தயங்கியே உரசியது சாலையை வாகனங்களும்
வியந்தே பார்த்தது மிதிப்படாத வீதிகளும் ....
மூவேழு நாட்களில் முறையே தீருமென்றெண்ணி
பூட்டில்லா சிறையிலே உயிர் காத்திட
வீட்டிலே உறவுகளோடு காவல் வைத்தான் ...

அலைந்து திரிந்தே ஓய்வின்றி உழைத்தவன்
அடைந்து கிடக்கின்றான் நான்குசுவர் மத்தியில்
கால்கள் வெளியே செல்ல எத்தனிக்கும்
கண்கள் வெளியுலகம் காண காத்திருக்கும்
செவி கேளா ஓசை கேட்க வலித்திருக்கும்
நாசிகள் சுவாசம் இல்லாதுபோல் தனித்திருக்கும்
கைகள் கட்டுண்டதாய் உணர்வின்றி மாய்த்திருக்கும்
ஆயினும் அடக்கத்தான் வேண்டும் ஐம்புலனையும்
ஆபத்துநேரம்  ஓட்டுக்குள் ஒடுங்கும் ஆமையாய் ....


1 comment:

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...