Friday, 2 September 2016

நானும் வாழ்கிறேன் !!!

நானும் வாழ்கிறேன் !!!
அதிகாலை  உதயலில் தொடங்கி
அந்தி மாலை சாய்தலில்
முடிவது வாழ்க்கை என்றால்
நானும் வாழ்ந்து கொண்டு
தான் இருக்கிறேன் .....

பூக்களைப் போல்....
காலையில் மலர்ந்து
வெயிலில் உலர்ந்து
மாலையில் தளர்ந்து
இறுதியில் மடிந்தே போகிறேன் ....

வாழ்விற்கு அர்த்தம் இதுவென்றால்
என்னைப்  போல் பலரும்
வாழ்வதைப் பார்க்கிறேன் ....

கனாக்களில் தொடங்கி
வினாக்களில்  முடிகிறது
சில சமயம் ...
இருப்பினும் நானும் வாழ்கிறேன் !!!

என்னைப் போல்....!!!
கேள்விக்கணைகளைத்  தொடுத்து 
மாலையாக்கி வாழ்பவர் ஏராளம் ....
எப்போதும் புரிந்ததில்லை...!!!
விடை  கண்டவர் சிலர் மட்டுமே ...







No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...