Thursday, 3 November 2016

பெயரிட்டான் பெண்ணென !!!!!



Image result for a girl sitting alone in the sunrise


அன்பின் பெருங்கடலும் இவளே !!
      ஆணின்  தேடலும் இவளே !!!
களங்கமில்லா அன்பிலே அவளைத்
        தாய் என்றான் !!!
கைப்பிடித்தபோதோ  அவளைத்
        தாரம் என்றான் !!!
தோள் தந்து தேற்றுமவளைத்
         தோழி என்றான் !!!
தலைக்கோதி விளையாடிட
         தமக்கை என்றான் !!!
தாலாட்டி சோறூட்டிட
         தங்கமகள் என்றான் !!!
மொத்தத்தில் தோற்றத்தில்
         தேவதை என்றான் !!!!!
விளங்கமுடியா புதிரென
     விதியின் விளைவால்
விதைத்திட்டான் இறைவன் ....
            விளக்கிட விழைந்து
 பெயரிட்டான் பெண்ணென  !!!!







No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...