Sunday, 21 February 2016

நிஜமாய் நீ ஆனால் .....!!!






துன்பம் வரும் வேளையிலே 
தூயவளே ! உன்னை நினைத்தால்
தூரப் போகுதடி ....

இன்பமான தருணங்களில் 
இனியவளே ! நீ வந்தால் 
இருமடங்குப் பெருகுதடி ...

தோல்வி அடையும்போது 
தோழியே ! நீ வந்தால் 
தூசு போல ஆனதடி.... 

வெற்றி பெறும் போது 
வெண்பூவே ! நீ இருந்தால் 
வானம் சிறியதானதடி....

கனவில் தோன்றிய என் 
   கற்பனையே !! நிஜமாய் நீ ஆனால் 
             நிழலாய் உன்னை தொடர்வேன் .......

1 comment:

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...