Tuesday, 9 February 2016

தேடும் துளிகள் ...









காற்றிலே கலந்து மேகத்தில் மறைந்து
மலையிலே பட்டு பூமியில் விழுந்ததால்
பூத்தது புதிதாய் ஒரு மொட்டு ....

பனித்துளியாய் சிரிக்கும் நீர்த்துளியே !!
பகலவன் பார்த்ததும் மறைந்தாயே ??

வான் ஒளியில் நீலவண்ண ஆடை
வெள்ளி மின்னலாய் காட்டிலே நீரோடை ....

தேன்சொரியும் பூக்களால் புது சுகந்தம்
வான்பொழியும் மழையாலே வசந்தம்.....


செல்லும் இடமெல்லாம் செழிப்பாக்கினாய்
வாழும் உயிர்களின் பசி போக்கினாய்....

காணும் இடமெல்லாம் காட்சியாய் நீ !!
பேண உனை மறந்ததால் வறட்சியாய் பூமி .....

ஜீவநதிகளின் ஜீவனை பூமியில் தொலைத்து
செவ்வாயில் தேடுகிறோம்  புதிதாய் நீருற்று.....








No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...