Friday, 12 February 2016

என் சுவாசக் காற்றே ....




உருவமே இல்லாமல் உயிர் கொடுக்கும் தெய்வம் நீ !
உணர்வுகளால் உன்னை உணர்த்தினாய் ....
தென்றலாய் வந்து தீண்டும் போது தோழியே !
தெவிட்டாத இன்பம் தந்தாய் ...
மணத்தை இப்பூவுலகெங்கும் பரப்பி என் 
மனதை கவர்ந்து சென்றாய் ...
நீர்த்துளியை சுமந்து மழையாய் பொழிந்து 
நிம்மதியாய் வாழவழி செய்தாய் ...
இனிமையான இசைதன்னை ஏந்தி வந்தென் 
இதயம் எங்கும் இதமாக்கினாய்...
சுகந்தமாய் வீச வேண்டிய நீ ஏனோ ?
சூறாவளியாய் சுழன்று வந்தெங்கள் 
சுகங்களை எல்லாம் திருடிச் சென்றாய் - அதனால் 
சிறகே இல்லாமல் பறக்கின்ற உன்னை 
சிறை வைக்க முயன்றேன் என் சுவாசத்தில் .....

No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...